பேரறிவாளன் விடுதலை: தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
பேரறிவாளன் விடுதலைக்கு எதிப்புத்தெரிவித்து தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
HIGHLIGHTS
தென்காசியில் ராஜிவ் காந்தி வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் 100க்கும் மேறட்ட காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்தபேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபாரதி அல்ல என்பதை அழுத்தமாக கூற விரும்புவதாகவும் இந்த தீர்ப்பு குறித்து மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் தென்காசி மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினறுமான பழனி நாடார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட100க்கும் மேற்பட்டோர் வாயில் வெள்ளைத் துணியை கட்டிக் கொண்டு அற போராட்டத்தில் ஈடுபட்டனர்.