/* */

பேரறிவாளன் விடுதலை: தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிப்புத்தெரிவித்து தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

பேரறிவாளன் விடுதலை: தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தென்காசி எம்எல்ஏ  பழனிநாடார் தலைமையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்

தென்காசியில் ராஜிவ் காந்தி வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் 100க்கும் மேறட்ட காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்தபேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபாரதி அல்ல என்பதை அழுத்தமாக கூற விரும்புவதாகவும் இந்த தீர்ப்பு குறித்து மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் தென்காசி மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினறுமான பழனி நாடார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட100க்கும் மேற்பட்டோர் வாயில் வெள்ளைத் துணியை கட்டிக் கொண்டு அற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 19 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...