/* */

சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு..!

பிரானூர் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு..!
X

சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்

தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரானூர் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரானூர் ஊராட்சியில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவை சேர்ந்தவர் இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யாமல் துணைத் தலைவர் வணிக நிறுவனங்கள் ஹோட்டல்களுக்கு வினியோகம் செய்து வருகிறார்.

எனவே எங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். இதனை கண்டித்து சில நாட்களுக்கு முன் ஊர் பொதுமக்கள் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் வந்து சமரசம் பேசியதால் கலைந்து சென்றனர்.

தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனு அளித்துள்ளனர். அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் வழங்காத தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரையும் நிர்வாகத்தையும் கண்டித்து திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ வருகை தந்து நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் குடிநீர் விநியோகம் சீராக வழங்க பேச்சுவார்த்தை நடத்தினார்.

குடிநீர் சீராக வழங்கப்படும் என்று உறுதி அழிக்கப்பட்டதால் பொதுமக்கள் அமைதியாக சென்றனர்.

Updated On: 20 April 2024 3:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  3. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  4. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  5. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  6. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  8. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  10. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...