Begin typing your search above and press return to search.
வெயிலுக்கு பதநீர், கொரோனாவுக்கு கபசுர குடிநீர் வழங்கும் சுரண்டை திமுக
பொதுமக்களுக்கு கோடைக்கு பதநீர், நுங்கு மற்றும் கொரோனாவுக்கு கபசுர குடிநீர் ஆகியவற்றை சுரண்டை திமுகவினர் வழங்கினர்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் மற்றும் பொன் ரா மருத்துவமனை அருகில் கோடையை தணிக்கும் விதமாக பதநீர், நுங்கு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக கபசுரக் குடிநீர், மற்றும் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக குடிதண்ணீர், நீர்மோர், பதநீர், நுங்கு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழக்கறிஞர் சிவ பத்மநாதன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் முருகைய்யா பொன்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்