/* */

குற்றாலம் அருவியில் குளிக்க கலெக்டரிடம் அனுமதி கேட்டு எம்எல்ஏ மனு

குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி எம்எல்ஏ மனு வழங்கினார்.

HIGHLIGHTS

குற்றாலம் அருவியில் குளிக்க கலெக்டரிடம் அனுமதி கேட்டு எம்எல்ஏ மனு
X

குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கவேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு . தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது மாநிலம் முழுவதும் முழு அளவில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது . இந்த நிலையில் நமது மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீராட பொது மக்களுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.குற்றாலத்தை பொறுத்தவரை அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

பிற இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டது போல் குற்றாலத்தில் உள்ள அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதன்முலம் அங்குள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்படும். ஆகவே தாங்கள் இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து அருவியில் பொதுமக்கள் நீராட கூடிய அனுமதி பெற்று வரவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 July 2021 2:55 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...