/* */

சுரண்டையில் போலி பத்திரம் மூலம் நில மோசடி: 6 பேர் மீது வழக்கு

சுரண்டையில் போலி பத்திரம் மூலம் நில மோசடியில் ஈடுப்பட்ட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை.

HIGHLIGHTS

சுரண்டையில் போலி பத்திரம் மூலம் நில மோசடி: 6 பேர் மீது வழக்கு
X

பைல் படம்.

சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் -ரஞ்சிதா தம்பதியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. செல்லப்பன் பல வருடங்களாக சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது தனது சொந்த ஊரான பரங்குன்றாபுரத்தில் 6 ஏக்கர் இடத்தை வாங்கினார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செல்லப்பன் மனைவி இறந்தார். அதில் இருந்து 6 மாதம். கழித்து செல்லப்பனும் இறந்து விட்டார்.

இந்நிலையில் இவரது சித்தி மகள் அதே ஊரைச் சேர்ந்த பால் என்பவரது மனைவி தங்கவடிவு என்பவர் கோர்ட்டில் செல்லப்பனுக்கு சொந்தமான 6 ஏக்கர் இடத்தை அவரது உறவினர்களான ஆனை குளத்தைச் சேர்ந்த சண்முகத் தாய் (68), சுரண்டையை சேர்ந்த ராமலட்சுமி (63), ராஜகோபாலபேரியை சேர்ந்த ராமர் (66), மருதுபுரத்தைச் சேர்ந்த வெள்ளத்தாய் (68), சென்னையை சேர்ந்த வைத்திலிங்கம் (80), சாம்பவர்வடகரையை சேர்ந்த மெர்லின் (29) ஆகிய 6 பேர் முறைகேடாக அவர்களது பெயரில் போலி பத்திரம் பகிர்ந்து கொண்டதாக வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட்டில் போலி பத்திரம் பதிவு செய்தது நிருபிக்கப்பட்டதால் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 24 Nov 2021 2:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்