/* */

தரமற்ற இனிப்பு பலகாரங்கள்: அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

தீபாவளியை முன்னிட்டு தரமற்ற இனிப்பு பலகாரங்கள் தயாரித்த நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

HIGHLIGHTS

தரமற்ற இனிப்பு பலகாரங்கள்: அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
X

 தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் தயார் செய்யும் இடத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

தீபாவளியை முன்னிட்டு தென்காசியில் பலகாரங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தயார் செய்யும் கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.. ஐம்பது கிலோவிற்கும் மேற்பட்ட தரமற்ற இனிப்பு பலகாரங்கள் மட்டும் தின்பண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உணவு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென்காசி மாவட்டம் மேலகரம் மற்றும் குத்துக்கல் வலசை பகுதிகளில் உள்ள தீபாவளி பலகாரங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தயார் செய்யப்படும் கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை நாக சுப்பிரமணியன் அதிரடி சோதனை மேற்கொண்டார். சோதனையின் போது அதிகமாக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட 31 கிலோ இனிப்பு பலகாரங்கள் , 22 கிலோ தின்பண்டங்கள் , 40 லிட்டர் மீண்டும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், ஒன்றரை லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள், 7 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மேலும் எரிப்பதற்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ முந்திரி தோடுகள் அப்பகுதிகளில் உள்ள கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து தரமற்ற இனிப்பு மற்றும் தின்பண்டங்களை வைத்திருந்த 3 கடைகளுக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தீபாவளி பலகாரங்கள் தயார் செய்யும் கூடங்களில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பலகாரங்கள் தயார் செய்யும் முன் தாயார் செய்யும் இடங்களை சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

பண்டிகை நாட்களில் இவ்வாறு அதிக அளவில் ஆன தரமற்ற பலகாரங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 Nov 2023 4:06 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...