Begin typing your search above and press return to search.
ஊழியர்களுக்கு கபசுர குடிநீர்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் உடல் நலனில் அக்கறைகொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக செங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் திருமதி. கலா அவர்களின் ஏற்பாட்டில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்து கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது..