தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்தும், அருவிகளை வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரிப்பு.
HIGHLIGHTS
தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்தும், அருவிகளை வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரிப்பு.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், செங்கோட்டை , கடையநல்லூர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அருவிக்கரைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக, சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அருவிகளை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.