கொரோனா சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...
அலுவலர்களுக்கு அறிவுரை
HIGHLIGHTS
தென்காசி தலைமை மருத்துவமனையில் இன்று கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு சிகிச்சை தன்மையையும், சிகிச்சை பெற்று வருவோருக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து வேகமாக பரவி வரும் கொரோனா வைரலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிறப்பு கவனமெடுக்க வேண்டுமெனவும், கூடுதலாக பெண்கள் உள்நோயாளிகள் பிரிவினை 50 படுக்கை வசதிகள் கொண்டு அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு விரைவில் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைப்பதற்கு பணி நடைபெறுவதை பார்வையிட்டு பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்திலும் தற்காலிக காய்கறி சந்தையினை சில்லரை வியாபாரம் செய்வதற்கும்;, மொத்த வியாபாரிகளுக்கு தற்போது இயங்கி வரும் காய்கறி சந்தையிலேயே வியாபாரம் செய்திட ஒதுக்கிடு செய்து வியாபாரிகள் முகக்கவசம் அணிந்து, சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தென்காசி நகராட்சி அலுவலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்காணித்து பதிவு செய்யும் பதிவேட்டினை ஆய்வு செய்து முறையாக பதிவு செய்ய வேண்டும் என்பதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சமீரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் தென்காசி கோட்டாட்சியர் ராமசந்திரன், தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் .கோகுல கிருஷ்ணன், தென்காசி நகராட்சி ஆணையாளர் பர்வின், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.