இந்து அறநிலையத்துறை நோயாளிகளுக்கு உணவு வழங்கல்
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவு வழங்கினர்.
HIGHLIGHTS
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்தபடி, தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோயில், இலஞ்சி குமாரர் திருக்கோயில், பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், கடையநல்லூர் அருள்மிகு முப்பிடாதி அம்மன் திருக்கோயில், மற்றும் கிருஷ்ணாபுரம் அபயவரத ஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆகியவற்றின் சார்பில் 365 உணவுப்பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டது.,
தென்காசி மாவட்ட அரசுத் தலைமைப் பொது மருத்துவமனை உறைவிட மருத்துவர் .ஜெஸ்லினிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள், கேசவராஜன், சுசீலாராணி, தென்காசி இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் .கலாமணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் .பாலமுருகன், . கருப்பசாமி ஆகியோர் பங்குபெற்றனர்.