நாளை குற்றாலம் திறக்கப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
நாளை குற்றாலம் திறக்கப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் வருகின்ற 20.12.2021 திங்கட் கிழமை அன்று பொதுமக்கள் , சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் அருவிப்பகுதிகள் நேரடியாக தலஆய்வு செய்யப்பட்டது. அருவிப்பகுதிகளில் இயற்கை சீற்றத்தின் காரணமாக உருவான கடும் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்திட அறிவுறுத்தியபடி ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் தென்காசி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மணிமாறன், உதவி பொறியாளர் எம்.எம்.முகைதீன் மற்றும் சுகாதார அலுவலர் இராஜகணபதி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.