35 நாட்களில் மாவட்டத்தில் 650 புதிய CCTV கேமரா அமைப்பு : தென்காசி காவல்துறை
தென்காசி மாவட்டத்தில் 35 நாட்களில் 650க்கும் அதிகமான புதிய CCTV கேமரா அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
35 நாட்களில் மாவட்டம் முழுவதும் 650க்கும் அதிகமான புதிய CCTV கேமராக்கள் அமைதியாக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கும்,நடைபெற்ற குற்ற செயல்களில் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிவதற்கும் காவல்துறையின் மூன்றாம் கண்களாக விளங்குவது CCTV கேமராக்கள் ஆகும்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுரையின்படி Safe Tenkasi Initiative என்ற திட்டத்தின் படி மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் CCTV கேமராக்கள் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு காவல் நிலையத்திற்கு ஒரு காவலர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர் பொதுமக்கள், நாட்டாமைகள் மற்றும் பெரியவர்களிடம் காவல்துறையினர் CCTV கேமராக்கள் அமைப்பதன் நன்மைகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளான பேருந்து நிலையங்கள், மார்க்கெட், கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் கிராமத்தின் முக்கிய சாலைகள் போன்ற பல்வேறு இடங்களில் 35 நாட்களுக்குள் புதிதாக 650க்கும் மேற்பட்ட CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களது வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் CCTV கேமராக்கள் அமைப்பதாக இருந்தால் காவல்துறை உதவி மையம் - 9385678039 என்ற எண்ணிற்கும தகவலை தெரியப்படுத்த தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.