/* */

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அறிவுரை: எஸ்பி பங்கேற்பு

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 -ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின்படி தேர்தல் கட்டுப்பாட்டு காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆய்வாளர் கூறுகையில், காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கட்டாயம் அறிந்து இருக்க வேண்டும் எனவும், பின்பு தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பணியின்போது காவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முறைகளை முறையாக பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுரைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 4 Oct 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    'நானும் ஓட்டு போடுகிறேன்' நான் ஏன் அரசியல் பேசக்கூடாது? மதுரை...
  2. காஞ்சிபுரம்
    மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - மதுரை ஆதீனம்...
  3. லைஃப்ஸ்டைல்
    ரிலாக்ஸ் பாஸ்! அதிக அளவு மன அழுத்தம் தொப்பையை உண்டாக்குமாம்!
  4. உலகம்
    உலகில் கடல் மட்டம் உயர்வதை காட்டும் நாசா கிராஃபிக்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. இந்தியா
    பிரதமர்-போப் சந்திப்பை கேலி செய்யும் பதிவு: கிறிஸ்தவர்களிடம்...
  8. நாமக்கல்
    நாமக்கல் அருகே வெறிநாய்த் தொல்லையால் ஆடுகள் இறப்பு
  9. JKKN
    AI இயக்கம் குறித்த ஆராய்ச்சி!
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...