/* */

தென்காசி சுரண்டை அருகே தந்தை வெட்டிக் கொலை மகன் வெறி செயல்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் சொத்து தகராறில் தந்தை வெட்டிக்கொலை செய்து. வெச் செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தென்காசி சுரண்டை அருகே தந்தை வெட்டிக் கொலை மகன் வெறி செயல்
X

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணம் மெயின் ரோடு காலனியை சேர்ந்தவர் சக்கையா மகன் சுடலையாண்டி (70) இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது மனைவி அன்னலட்சுமி கடந்த 15 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் தனது தயார் இறந்துவிட்டார் என மன வருத்தத்தில் மூத்த மகன் பெருமாள் (42) இருந்து வந்துள்ளார்.

பெருமாளுக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தனக்குரிய சொத்தை எழுதி தருமாறு தந்தை சுடலையாண்டியிடம் மகன் பெருமாள் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே சொத்து தகராறு முற்றவே இன்று காலை 7 மணியளவில் வயலில் தந்தையை அரிவாளால் வெட்டினார் மகன் பெருமாள். இதில் சுடலையாண்டி இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னி வளவன், சுரண்டை இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வீகே புதூர் சப் இன்ஸ்பெக்டர் காஜா முகைதீன் மற்றும் போலீசார் சுடலையாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையை வெட்டிக்கொலை செய்த பெருமாளை கைது செய்து, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 20 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்