வாக்களிக்க விழிப்புணர்வு : மேளதாளங்கள் முழங்க காவல்துறை அணிவகுப்பு
சிவகங்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்
HIGHLIGHTS
சிவகங்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேலதாலங்கள் முழங்க காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி சிவகங்கை நகராட்சி பகுதியில் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பை துவக்கி வைத்தார். மேளதாளங்கள் முழங்க அரண்மனை வாயில் முன்பு தொடங்கிய அணிவகுப்பு மதுரை முக்கு, காந்தி வீதி, நேரு பஜார் வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த காவல்துறை கொடி அணிவகுப்பில் ஆண், பெண் காவலர்கள் மற்றும் அதிவிரைவு படையினர் என சுமார் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.