Begin typing your search above and press return to search.
காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை.
தினசரி சந்தை வியாபாரிகள்
HIGHLIGHTS
காரைக்குடியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை.
தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக,இன்று முதல் தமிழகமெங்கும் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி மதியம் 12 மணிவரை காய்கறி, இறைச்சி கடைகள் பலசரக்கு மளிகை கடைகள் உட்பட சில கடைகள் இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் இயங்கிவரும் தினசரி சந்தை வியாபாரிகள் அனுமதிக்கப்பட்ட 12 மணியை தாண்டி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் வந்து, வியாபாரத்தை மேற்கொண்ட வியாபாரிகளை எச்சரித்து கடையை அடைக்க செய்தனர்.