மருதுபாண்டியர் குருபூஜை: சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக்- பள்ளிகள் விடுமுறை
மருதுபாண்டியர்-பசும்பொன் தேவர் குருபூஜைகளை முன்னிட்டு அக்.27 மற்றும் 30 -இல் சிவகங்கை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
HIGHLIGHTS
மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் நாளை (அக். 27) மருதுபாண்டியர்கள் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளும், உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் உரிமம் பெற்ற இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் அரசின் உத்தரவுப்படி நாளை மூடப்பட்டிருக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் விதிகளை மீறிய மதுபானங்களை விற்பவன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் நாளை நடைபெற உள்ள மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு நாளையும்(அக்.27), தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகின்ற 30 -ஆம் தேதியும், மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகளுக்கும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி உத்தரவிட்டுள்ளார்.