பாஜக அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசியது அக்கட்சியினர்தான்: சுப.வீரபாண்டியன் சந்தேகம்
முன்னாள் முதல்வர் கூறுவது போல அதிமுக அரசின் சாதனை சொல்லி வாக்கு கேட்டால் திமுகவிற்குத்தான் ஒட்டு கிடைக்கும்
HIGHLIGHTS
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீசியது அந்தக்கட்சியினராகத்தான் இருக்கும் என சந்தேகம் தெரிவித்தார் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன்.
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது அவர்களாகத்தான் தான் இருக்கும். முன்னாள் முதல்வர் கூறுவது போல அதிமுக அரசின் சாதனை சொல்லி வாக்கு கேட்டால் திமுகவிற்க்கு தான் ஒட்டு கிடைக்கும். எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகளை பார்த்து பாடம் கற்றுகொள்ள வேண்டும். நாம் தமிழர் ஆட்சிக்கு வர முதலில் டெப்பாசிட் பெற வேண்டும். ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஒரு போதும் மதச்சண்டைகள் வராது. மதக்கலவரத்தை உருவாக்கும் பாஜகவை இந்தியாவே புறக்கணிக்க வேண்டும் என்றார் சுப.வீரபாண்டியன்.