பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது குண்டாஸ்.
பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவை...
HIGHLIGHTS
பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கடந்த 07.03.௨௧ ம் தேதி வளர்மதி, க.பெ சந்தியேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மானாமதுரை காவல் நிலைய குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனசேகர்,ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் வழக்கில் தொடர்புடைய இவர்கள் மீது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராசராசன் பரிந்துரையின் பேரில்,சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உத்தரவின் படி தடுப்புக் காவல் (குண்டர்) சட்டத்தில், மானாமதுரை காவல் இன்ஸ்பெக்டர் அனுசா மனோகரியால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.