இராணிப்பேட்டை மாவட்டஉள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சிதேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவிஏற்றுக் கொண்டனர் .
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம பஞ்.. தலைவர் , வார்டு உறுப்பினர்கள், மாவட்டமற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட 2648 பதவிகளுக்கு கடந்த 6,9 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது .
அதனைத்தொடர்ந்துதேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தலைவர்மற்றும் பஞ் வார்டு உறுப்பினர்கள் பதவிகளை ஏற்றுக் கொண்டனர் .
இந்நிலையில்,இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி அலுவலகம் இராணிப்பேட்டை அருகிலுள்ள பாரதி நகரில் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,.இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில், இணைஇயக்குநர் வேலாயுதம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் வெற்றிபெற்ற ஜெயந்திஉள்ளிட்ட 13பேரும் பதவி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் போது உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு அவர்களது உறவினர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.