ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நாளை வெளியீடு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் நாளை வெளியிகிறார்.
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் நாளை வெளியிடுகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியலை, நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பாரஜ் வெளியிட உள்ளார்.
அது சம்பந்தமாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரைவு செய்யப்பட்ட வாக்குசாவடிகள் குறித்து கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை வரும் 7 ம் தேதியன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கலாம்.
ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்ப்பு அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடக்க உள்ள கருத்து கேட்பு கூட்டத்தில், மனுக்களாக வழங்கிடுமாறு பொதுமக்கள் மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.