ராணிப்பேட்டை மாவட்டாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
ராணிப்பேட்டை மாவட்டாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கம்சலா(70). இவருக்கு இரு மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவரது மகனான பச்சையப்பன், தங்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கு அனைவரும் கையெழுத்திட வேண்டுமெனக் கூறியுள்ளார்.
அதனை உண்மை என நம்பிய குடும்பத்தினர், அனைவரிடமும் கையெழுத்து பெற்று வீட்டை தனது பெயரில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கம்சலா எந்தவித ஆதரவும் இல்லாமல் தவித்து வருவதாகவும், தன்னை ஏமாற்றிய தனது மகன் பச்சையப்பனிடமிருந்து வீட்.டை மீட்டு மீண்டும் தனது பெயருக்கே மாற்றிதரக்கோரி சம்பந்தபட்ட துறை் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆயினும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் தட.டிக்கழித்து வந்துள்ளதாகவும் மூதாட்டிதரப்பில் கூறப்படுகிறது. இதனால் , மனவேதனையடைந்த மூதாட்டி கம்சலா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திறகு வந்து திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அதனைக் கண்ட போலீசார் மற்றும் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் கம்சலா மீது தண்ணீர் ஊற்றி அவரை மீட்டதோடு அவரிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்டனர்.
பசுமை வீடு கட்டுவதாக ஏமாற்றி கையெழுத்து வாங்கி வீட்டை அபகரித்த சொந்த மகனிடமிருந்து வீட்டை மீட்டுதர வேண்டி தாய் ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.