சிறுபான்மை மாணவர்களின் கல்வி் உதவித்தொகைக்கான விண்ணப்பம் புதுப்பித்தல்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுபான்மை மாணவர்களின் கல்வி் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை புதுப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மாணவர்களுக்கான பள்ளிக்கல்வி, மேற்படிப்பு ஆகியவற்றிற்கு வருவாய் மற்றும் தகுதி அடிப்படையின் கீழ் மத்திய அரசு கல்வி உதவித் வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் நடப்பு ஆண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைப் பெற தகுதியான மாணவர்கள் 30-11-2021 க்குள் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் (NSP) உடனே புதுப்பிக்கவேண்டும். மேலும் கல்வித்தொகைக்காக புதுப்பித்த விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமானச்சான்று சமர்ப்பிக்க வேண்டியதில்லை. ஆதாரில் பெயர் திருத்தம் செய்ய வேண்டி புதுப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் .
எனவே அனைத்து கல்வி நிலையங்களும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியானவர்களைத் தொடர்புகொண்டு 30-11-2021க்குள் இணையத்தில் புதுப்பிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இத்திட்டம. குறித்த விபரங்கட்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைநல அலுவலரை தொடர்புகொள்ளலாம்