மாற்றுக் கட்சியில் இருந்து 1000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
1000க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி ராஜீவ் காந்தி தலைமையில் திமுகவில் இணைந்தனர்
HIGHLIGHTS
மாற்றுக் கட்சிகள் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
இராமநாதபுரம் பழைய சோதனைச்சாவடி அருகிலுள்ள திருமண மண்டபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
திமுக கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளிலிருந்து நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, அதிமுக கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 300 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் இராமநாதபுரம் பாராளுமன்ற பொறுப்பாளர் பத்மநாபன், வீரத்தமிழர் முன்னணியின் மாவட்ட செயலாளர் காளிமுத்தன், அதிமுகவின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜபருல்லா கான் உங்களிட்ட 500-க்கும் மேற்பட்டோர் மண்டபம் ஒன்றியங்களில் இருந்து தங்களை இணைத்துக் கொண்டனர்.
மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்த அனைவருக்கும் திமுக கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளரும், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் திமுக வேஷ்டியை பொன்னாடையாக அணிவித்து கட்சிக்குள் இனிதே வரவேற்றனர். இவர்கள் அனைவருக்கும் விரைவில் சார்பு அணியில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.