/* */

ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மைய சென்சார் உடைப்பு: ஒருவர் கைது

ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மையத்தில் சென்சாரை நொறுக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மைய சென்சார் உடைப்பு: ஒருவர் கைது
X

ராமநாதபுரம் கள்ளர் தெரு சந்திப்பில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையம்.

ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மையத்தில் சென்சாரை நொறுக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் கள்ளர் தெரு சந்திப்பில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை இங்கு அலாரம் ஒலித்தது. இதையடுத்து வங்கி தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வங்கி பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவி உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

போலீசாரின் துரித விசாரணையில், மது போதையில் ஒருவர் அங்கு சுற்றியது தெரிந்தது. இதன்படி கள்ளர் தெரு ரோஸ் நகரில் வசிக்கும் ஆர்எஸ் மங்கலம் அருகே சனவெளி செட்டியகோட்டையைச் சரவணனை கைது செய்தனர்.

விசாரணையில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவியை தெரியாமல் உடைத்ததால் எச்சரிக்கை மணி ஒலித்த அச்சத்தால் அங்கிருந்து ஓடி விட்டதாக தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!