நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அறந்தாங்கியில் அதிமுக வேட்பாளர் நேர்காணல்
அறந்தாங்கியில் நகராட்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது.
HIGHLIGHTS
அறந்தாங்கியில் நகராட்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வருகிற 19 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி நகராட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க சார்பில் நகரில் 27 வார்டுகளுக்கு கட்சி சார்பில் விருப்பமணு அளித்தவர்களிடம் முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏயும் வடக்கு மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து முன்னாள் மாவட்ட செயலாளர் வி.சி.ராமையா ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறந்தாங்கி நகர செயலாளர் மோகனக்குமார், முன்னாள் அறந்தாங்கி எம்.எல்.ஏ மு.ராஜநாயகம், ஒன்றிய கழக செயலாளர்கள் பெரியசாமி, வேலாயுதம், குழந்தைச்செல்வன், கூத்தையா, துரைமாணிக்கம், நவக்குடி சுப்பிரமணியன் மற்றும் நகரக்கழக வட்டகழக ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.