புதுக்கோட்டையில் ஊரடங்கில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு
புதுக்கோட்டையில் முழு ஊரடங்கை பின்பற்றாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தற்போது அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்றும், இன்னும் பதினைந்து இருபது நாட்களுக்குள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் முழு ஊரடங்கு பின்பற்றாமல் பொது வெளியில் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
அதேபோல் தற்போது உள்ள முழு ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்காக தமிழக அரசு சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது நடமாடும் வாகன ஓட்டுநர் மற்றும் விற்பனையாளர் ஆகியோருக்கு கோவிட் தடுப்பூசியை கண்டிப்பாக போட்டுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்