புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள சிவன்கோயிலில் சிவராத்திரி வழிபாடு
சிவராத்திரியையொட்டி ஏகாதசி ருத்ரா அபிஷேகம் பல்வேறு சிவசாரியார்கள் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்றது
HIGHLIGHTS
புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகா ஸமேத வம்சோதாரகர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டைமாவட்டம் பெருங்களூரில்உள்ள ஸ்ரீ மங்களாம்பிகா ஸமேத வம்சோதாரகர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ஏகாதசி ருத்ரா அபிஷேகம் பல்வேறு சிவச்சாரியார்கள் முன்னிலையில் தொடர்ந்து நடந்தது
ஸ்ரீவம்சோதாரகர் சுவாமிக்கு, ஸ்ரீ மங்களாம்பிகா சுவாமிக்கு மங்கள வாத்தியம் முழங்க பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகமும் நான்கு காலபூஜையும் நடந்தது . கோயில் நிர்வாகிகள் எஸ்.கே.பி.சிடி மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஞான ஸ்கந்த குருக்கள், பிரபு குருக்கள் கோயில்பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வருகைதந்து வழிபட்டனர்