/* */

புதுக்கோட்டை நகரில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்

புதுக்கோட்டை நகர பகுதியில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நெகிழி பைகளை அதிகாரிகள் பறிமுதல செய்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகரில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்
X

தமிழகம் முழுவதும் நெகிழிப் பைகளை தடை செய்வதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மஞ்சப்பை இயக்கம் என ஒரு திட்டத்தை துவக்கி வைத்து அனைவரும் மஞ்சப்பை மற்றும் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழ்நாடு முழுவதும் நெகிழிப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் மருந்து கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை மறைத்து வைத்திருந்த கடைகளிலிருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து நெகிழிப் பைகளை கடைகளில் வைத்திருந்த கடைகளுக்கு மொத்தமாக 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Updated On: 5 Jan 2022 4:09 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...