புதுக்கோட்டை சந்தை: கொட்டும் மழையில் தீபாவளி விற்பனைக்கு குவிந்த ஆடுகள்
ஆட்டுச் சந்தைக்கு மணப்பாறை, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்தனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி கொட்டும் மழையில் விற்பனைக்கு ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
தீபாவளிப் பண்டிகை வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே உள்ள வாரச்சந்தையில் தீபாவளி விற்பனைக்காக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் இன்று ஆடுகள் அதிக அளவில் விற்பனையாகும் என்ற நம்பிக்கையில், லாரி லாரியாக ஆடுகளை ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டை ஆட்டுச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வந்ததால் ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வராத காரணத்தினால், புதுக்கோட்டை வெள்ளிக்கிழமை வாரச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். ஆனால், ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் வராததாலும் ஒரு சில வியாபாரிகள் ஆடுகளை குறைந்த விலைக்கு கேட்பதாலும் ஆடுகளை விற்பனை செய்ய முடியாமல் ஆடு வளர்க்கும் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, தீபாவளி பண்டிகை என்றாலே ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும். ஆனால், வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில், புதுக்கோட்டை, மணப்பாறை, பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்தவர்கள், விற்பனை செய்ய முடியாமல் கொட்டும் மழையில் குடைபிடித்து விற்பனை செய்ய முடியாத ஆடுகளை மீண்டும் வாகனத்தில் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.