புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் தேன்கூடு
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் தேன்கூடுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடர்ந்த காட்டுப்பகுதி இருப்பதால் அதிக அளவில் பல்வேறு இடங்களில் மரத்தின் மேல் தேன்கூடுகள் இருந்து வருகிறது .
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பழைய கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் பெரிய அளவில் தேன்கூடு இருக்கிறது. இந்த அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல் அலுவலகப் பணிக்காக பொதுமக்களும் அந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். அலுவலகம் உள்ளே செல்லும் மேல் பகுதியில் பெரிய அளவில் தேன்கூடு இருப்பதால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அச்சம் அடைகின்றனர்.
குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் வெள்ளை அடிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் எதிர்பாராத விதமாக தேன்கூட்டில் ஏதாவது பலகைகள் கம்புகள் விழுந்து விட்டால் தேன் கூடு கலைந்து அங்கே பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேன் கூடு கலைந்து வண்டுகள் கடித்து விடும் நிலை இருந்து வருகிறது .
எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் இருக்கும் தேன் கூட்டை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.