புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் அமைப்பு
புதுக்கோட்டையில் சமூக சேவை அமைப்பு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சமூகசேவகர் அவர் தலைமையில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குழு அமைத்து கொரேனா நோயாளிகளுக்கு உதவி வருகின்றனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கிவருகின்றனர்.
தண்ணீர் பாட்டில், நெல்லிக்காய் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி தரும் பொருட்களை கொரனா பிரிவுக்கு எதிரே உள்ள பயணியர் பிரிவில் வைத்து வழங்கி வருகின்றனர்.
நோயாளிகளுக்கு ஏதேனும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் தண்ணீர் உள்ளிட்டவைகள் தேவைப்பட்டால் உடனடியாக அவர்களுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம்.
அவ்வாறு கேட்கும் பட்சத்தில் அந்த அமைப்பினர் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த செயல் புதுக்கோட்டை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது..