என்.எம்.எம்.எஸ். தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,606 மாணவர்கள் பங்கேற்பு
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்.எம்.எம்.எஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட என்.எம்.எம்.எஸ். தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 6,606 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்.எம்.எம்.எஸ்) இந்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிற்கான சனிக்கிழமை (25.2.2023) நடைபெற்றது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 6, 736 மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்தனர்.
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் இடை நிற்றலை தடுக்கவும், நலிவடைந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்காகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்.எம்.எம்.எஸ்) இந்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டு தோறும் இத்திட்டத்தின்படி நடத்தப்ப டும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்ெவாரு வருடமும் ரூ.12 ஆயிரம் வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
நடப்பாண்டிற்கான தேர்வு 25.2.2023 -ஆம் தேதி(சனிக்கிழமை) நடைபெற்றது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த என்.எம்.எம்.எஸ். தேர்வானது, மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறிவுத்திறன் தேர்வு என இரு பகுதிகளை கொண்டதாகும். மாணவர்களின் பகுப்பாய்வுத்திறன், காரணம் அறியும் திறன், சிந்திக்கும் திறன், எண்ணியல் திறன் போன்றவற்றை சோதித்து அறிவது, மனத்திறன் தேர்வாகும்.
மேலும், மாணவர்கள் பாடப்பொருளில் பெற்றுள்ள அறிவை சோதித்து அறிவதாக படிப்பறிவுத்திறன் தேர்வு அமைகிறது. இத்தேர்வில் கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 6, 736 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 28 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இன்று காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான பணிகளில் 350 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:, என்.எம்.எம்.எஸ், தேர்வில் அதிக மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் மீது அக்கறை கொண்ட ஆசிரியர்கள் பலர், விருப்பத்தின் பேரில் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.அதன் பலனாக நடப்பாண்டிற்கான என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 498 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலிருந்து 6,736 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில், தேர்வு எழுத வராதவர்கள் 130 பேர் போக மீதமுள்ள 6,606 மாணவ, மாணவிகள் இத்தேர்வினை எழுதியுள்ளனர்.
இவர்களுக்கு அந்தந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை காலை, மாலைகளிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்தினர். அத்துடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வும் நடத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று தலா ரூ.48 ஆயிரம் உதவித் தொகை பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.