/* */

எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் புதியஉறுப்பினர்கள் இணைந்தனர்

புதுக்கோட்டை மாவட்ட ஓபிசி அணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்

HIGHLIGHTS

எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் புதியஉறுப்பினர்கள் இணைந்தனர்
X

புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஓபிசி   அணியின் சார்பில் புதிதாக    காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்    இணையும் நிகழ்வு எம்பி    திருநாவுக்கரசர் தலைமையில்    நடைபெற்றது

எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஓபிசி அணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமை வகித்தார்.இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஓபிசி அணியின் மாவட்டத் தலைவர் துரைசிங்கம் ஓபிசி அணியின் நகர தலைவர் கண்ணன் ஏற்பாட்டின் பேரில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.புதிதாக இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முருகேசன் முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவ்யநாதன், நகர தலைவர் இப்ராஹிம் பாபு, மற்றும் நிர்வாகிகள் சூர்யா பழனியப்பன், மக்கள் கோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 21 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்