/* */

சம்பளம் தராததை கண்டித்து நகராட்சி முற்றுகை

சம்பளம் தராததை கண்டித்து நகராட்சி முற்றுகை
X

புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 2 மாத சம்பளம் தராததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நகராட்சியை முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் தராததால் நாங்கள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில் இருந்து வருகிறோம். நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வரும் எங்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வராததால் குடும்பம் நடத்த முடியாத ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது.

எனவே தங்களுக்கு 2 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கூறி இன்று 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களிடம் நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணியன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கி தொகையை தருவதற்கு நடவடிக்கை எடுக்கின்றேன் என கூறியதை அடுத்து அவர்கள் நகராட்சி ஆணையரிடம் மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 10 April 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!