சம்பளம் தராததை கண்டித்து நகராட்சி முற்றுகை
புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 2 மாத சம்பளம் தராததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நகராட்சியை முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் தராததால் நாங்கள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில் இருந்து வருகிறோம். நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வரும் எங்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வராததால் குடும்பம் நடத்த முடியாத ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது.
எனவே தங்களுக்கு 2 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கூறி இன்று 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களிடம் நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணியன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கி தொகையை தருவதற்கு நடவடிக்கை எடுக்கின்றேன் என கூறியதை அடுத்து அவர்கள் நகராட்சி ஆணையரிடம் மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.