/* */

கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் பணியிடை நீக்கம்

வங்கிக்கு பயிர்க் கடன்கள் வாங்க வரும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாக எழுந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது

HIGHLIGHTS

கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் பணியிடை நீக்கம்
X

பணியிடை நீக்கம் செய்யப்பட் கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் செயலர் ராஜகோபால். 

புதுக்கோட்டை அருகேயுள்ள கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட இணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வருபவர் ராஜகோபால். இவர் வங்கிக்கு பயிர்க் கடன்கள் வாங்க வரும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாகவும் அவர்களுக்கு பயிர் கடன் கொடுக்காமல் அலைக்கழித்த வருவதாகவும் ராஜகோபால் மீது விவசாயிகள் மாவட்ட இணை பதிவாளரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மாவட்ட இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி நடத்திய விசாரணையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபால் பயிர் கடன் வாங்க வந்த விவசாயிகளை தரக்குறைவாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வாங்குவதற்கு வந்த விவசாயிகளை தரக்குறைவாக பேசி அலைக்கழித்து வந்த தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து, கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணை பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.

Updated On: 10 Dec 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்