கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் பணியிடை நீக்கம்
வங்கிக்கு பயிர்க் கடன்கள் வாங்க வரும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாக எழுந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
HIGHLIGHTS
புதுக்கோட்டை அருகேயுள்ள கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட இணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வருபவர் ராஜகோபால். இவர் வங்கிக்கு பயிர்க் கடன்கள் வாங்க வரும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாகவும் அவர்களுக்கு பயிர் கடன் கொடுக்காமல் அலைக்கழித்த வருவதாகவும் ராஜகோபால் மீது விவசாயிகள் மாவட்ட இணை பதிவாளரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மாவட்ட இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி நடத்திய விசாரணையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபால் பயிர் கடன் வாங்க வந்த விவசாயிகளை தரக்குறைவாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து கீரனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வாங்குவதற்கு வந்த விவசாயிகளை தரக்குறைவாக பேசி அலைக்கழித்து வந்த தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து, கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணை பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.