ஆடிட்டர் வீட்டில் 91 சவரன் நகை கொள்ளை
புதுக்கோட்டை நகராட்சியில் ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 91 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை திருவப்பூர் சௌராஷ்ட்ரா பெரிய கோவில் தெருவில் வசித்து வரும் பூரண வள்ளி என்பவர் புதுக்கோட்டை நகராட்சியில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சௌராஷ்டிரா தெருவில் உள்ள அவரது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நமணசமுத்திரம் அருகே அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார் இந்நிலையில் இன்று பூரணா வள்ளி வீட்டிற்கு அவரது உறவினர் வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து பூரண வள்ளிக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக வீட்டை வந்து பார்த்த உறவினர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்தனர். உடனே இது குறித்து திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டு வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு சுமார் 91 சவரன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.