முன்னாள் திமுக நகர செயலாளர் நினைவு நாள்: மரியாதை செய்த திமுக எம்எல்ஏ
முன்னாள் திமுக நகர செயலாளர் முத்துசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
புதுக்கோட்டை திமுக முன்னாள் நகர கழக செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும் கழக தீர்மான குழு உறுப்பினராக பணியாற்றி மறைந்த முத்துச்சாமியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை கம்பன் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட அவருடைய உருவப்படத்துக்கு திமுக முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவில் தனக்கென ஒரு அடையாளத்தை நிலை நாட்டிக் கொண்டு கட்சியை பலப்படுத்துவதிலும் கட்சி அறிவிக்கும் போராட்டம் மற்றும் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் அதிக அளவில் கலந்து கொண்டு கட்சிபணியாற்றிவர். மறைந்த முத்துச்சாமியின் மறைவு தினத்தை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி 25ஆம் தேதி நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கம்பம் நகரில் அவருடைய இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட முத்துச்சாமியின் புகைப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா மற்றும் 25வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திலகவதி செந்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்வில் முத்துசாமி குடும்பத்தார்கள் இளம்பரிதி, இளங்கதிர், இளவேனில், மற்றும் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தென்னரசு, 37வது வட்ட கழக செயலாளர் ராஜதுரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளஞ்சேரன் முத்துச்சாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.