குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம்: ஆம் ஆத்மி
புதுக்கோட்டை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் அப்துல் ஜாபர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை நார்த்தாமலையில் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கடந்த 30 ஆம் தேதி நார்த்தாமலையில் தனது பாட்டி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
ஆனால், தமிழக அரசு வழங்கிய நிவாரண நிதி போதாது தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரண நிதி தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் அப்துல் ஜாபர் தலைமையில், நார்த்தாமலை பகுதியிலுள்ள சிறுவர்களை அழைத்து வந்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.