/* */

கல்லூரிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்: ஆர்வமுடம் பங்கேற்ற மாணவர்கள்

அரசு மகளிர் கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

கல்லூரிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்:  ஆர்வமுடம் பங்கேற்ற மாணவர்கள்
X

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற மாணவிகள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. தற்போது, தமிழகம் முழுவதும் செப். 1 -ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவ மாணவிகளும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிபோட்டுக் கொண்டவர்கள் மட்டும் தான் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழகஅரசு அறிவித்திருந்த நிலையில், நேற்று தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக கல்லூரி மாணவ, மாணவிகள் நகர மன்ற வளாகத்தில் அதிகளவில் திரண்டனர்.


கல்லூரி திறக்கும் தேதிக்குள் மாணவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தற்போது, புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரி என இரண்டு கல்லூரிகளில், மாணவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இன்று காலை துவங்கிய இந்த தடுப்பூசி முகாமில் அதிக அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்பொழுது ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.


Updated On: 30 Aug 2021 7:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...