புதுக்கோட்டை மியூசியத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பயன்படுத்திய கொத்துக் கரணை
புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்டபைரவத் தொண்டைமான் இக்கரணையைக் கொண்டு 24.02.1913 அன்று புதியஅரண்மனைக்கு அடித்தளமிட்டார்
HIGHLIGHTS
புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கொத்துக்கரணை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டிலேயே இரண்டாவது அருங்காட்சியமாக இருந்து வருவது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகரணம் அரசு அருங்காட்சியம்தான்.இந்த அருங்காட்சியகத்தில் மன்னர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் போர் கருவிகள் மற்றும் பல்வேறு வகையான விலங்குகள் உயிருடன் பாடம் செய்து வைக்கப்பட்டு தத்துரூபமாக அதிக பொருட்செலவில் அமைந்துள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் மாதம் ஒருமுறை பள்ளி மாணவ மாணவிகள் கண்டு ரசிக்கும் விதத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மன்னர்கள் காலங்களில் பயன்படுத்தப்பட்ட மிக அரிதாக உள்ள பொருள்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசிப்பதற்காக காட்சிக்காக வைக்கப்படும் .
அந்த வகையில், இன்று புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் மார்ச் 1ஆம் தேதி இந்த மாதத்தில பார்வையாளர்கள் பார்வையிடுவதற்காக மாதாந்திர சிறப்பு அரும்பொருள் ஒன்று (கரணை அல்லது கொல்லறு) காட்சிக்கு வைக்கபபட்டுள்ளது. இவ்வரும் பொருள் வெள்ளி உலோகத்தாலானது.கைப பிடி வெள்ளி தந்தத்தால் ஆனது. மாட்சிமை தாங்கிய புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் அவர்கள் இக்கரணையைக்கொண்டு 24.02.1913 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள புதிய அரண்மனைக்கு அடித்தளமிட்டார்
இந்த அரிய பொருளை மேற்கண்ட மன்னர் புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் அன்பளிப்பாக மன்னர் அளித்தார். இவ் வரிய அரும்பொருளை அனைவரும் தற்போது இந்த மாதம் மார்ச் 31-ஆம் தேதி வரை வார விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் இரண்டாவது சனிக்கிழமையைத்தவிர நாள்தோறும் காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.