/* */

கிறிஸ்துமஸ் விழா: புதுக்கோட்டை திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

HIGHLIGHTS

கிறிஸ்துமஸ் விழா: புதுக்கோட்டை திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி
X

புதுக்கோட்டை திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள்.

திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நாடு முழுவதும் இன்று இன்று இரவு 12 மணி அளவில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று கிறிஸ்மஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் புதுக்கோட்டையில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர். இதில் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியை பேராலயர்கள் நிறைவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடியில் பிறந்த குழந்தையை இயேசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர் குழந்தை இயேசுவின் பிறப்பின் போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். மேலும் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த இயேசு பிறப்புக் குடிலில் குழந்தைகள் நடனம் ஆடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர்.

Updated On: 24 Dec 2021 7:18 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்