கலீப்நகர் பகுதியில் அடிப்படை வசதிகள்: திமுக எம்பி ஆய்வு
14 ஆண்டுகளாக புதை சாக்கடைத் திட்டம் கலீப் நகர் பகுதியில் சரிவர நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது
HIGHLIGHTS
கலீப்நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மாநிலங்களவை எம்பி அப்துல்லா ஆய்வு செய்தார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ், 14 ஆண்டுகளாக புதை சாக்கடைத் திட்டம் கலீப் நகர் பகுதியில் சரிவர நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. சாக்கடைகளில் கழிவுநீர் செல்லாமல் அடைத்து தேங்கி நின்று வருவதாக இப்பகுதி மக்கள் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் மஜீத்முபாரக் வேண்டுகோளுக்கு இணங்க, கலீப் நகர் பகுதியில் பல்வேறு பகுதிகளை நேரடியாக திமுக மாநிலங்களவை எம்பி எம். எம். அப்துல்லா மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேலும், நகராட்சி ஆணையர் நாகராஜிடம் உடனடியாக புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைவுபடுத்தி கலீப் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாக்கடைகள் தேங்கி உள்ள கழிவு நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில் திமுக நகர கழக செயலாளர் க. நைனாமுகமது மற்றும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்