/* */

புதுக்கோட்டையில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
X

புதுக்கோட்டையில் தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக இருக்கும் பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை செய்து கொண்டாடி வருவது வழக்கம்.

ஆனால், கடந்த வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு கூட்டு தொழுகைக்கு அனுமதி அளிக்காததால் பக்ரீத் மட்டும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் கொண்டாடாமல் தங்களது வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், இந்த வருடம் பக்ரீத் பண்டிகைக்கு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஈடுபடுவதற்கு தமிழக அரசு அனுமதியை வழங்கியுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்தக பள்ளிவாசலில் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்து அரசு அறிவித்த நெறிமுறைகளின்படி பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

அதுமட்டுமல்லாமல் பக்ரீத் பண்டிகை முடிந்த உடன் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்து கொள்வார்கள். ஆனால், தற்போது வைரஸ் தொற்று காரணமாக அது போன்ற நிகழ்வுகள் பள்ளிவாசல்களில் நடைபெறக் கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

Updated On: 21 July 2021 3:21 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்