Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் அப்துல்கலாமின் நினைவு நாள் அனுசரிப்பு
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
HIGHLIGHTS
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை பெரியார் நகரில் இன்று அவருடைய சிலைக்கு சாய் சேவா பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி உள்ள பொதுமக்கள் சிறுவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் அப்துல் கலாமின் கனவை நினைவாக்கும் விதத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்திலும் மரக்கன்றுகள் நடுவது சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் பெரியார் நகரில் மட்டும்தான் அப்துல்கலாமின் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.