புதுக்கோட்டையில் நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையில் 964 வழக்குகள் தீர்வு
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை லோக் அதாலத் விசாரணை நடைபெற்றது.
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 964 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற லோக் அதாலத்தில் உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, செக் மோசடி மற்றும் வங்கி வராக்கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் என மொத்தம் 964 வழக்குகள் தீர்வு காணப்பட்டு சுமார் 5 கோடியே 44 லட்சத்து 7ஆயிரத்து ,698 ரூபாய் தொகைக்கான சமரச முடிவு ஏற்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமையில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) விசாரணை நடைபெற்றது.
மேலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராஜா, முதன்மை சார்பு நீதிபதி சசிகுமார், கூடுதல் சார்பு நீதிபதி அசோக்குமார், நீதித்துறை நடுவர் அறிவு ஆகிய நீதிபதிகள் கொண்ட மூன்று அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்ற 4 அமர்வுகள் என மொத்தம் ஏழு அமர்வுகளில் நீதிமன்ற நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, செக் மோசடி மற்றும் வங்கி வராக்கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் என மொத்தம் 964 வழக்குகளும் தீர்வு காணப்பட்டு சுமார் 5 கோடியே 44 லட்சத்து 7ஆயிரத்து 698 ரூபாய் தொகைக்கான சமரச முடிவு ஏற்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.