/* */

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில் வேட்டையாட வந்த 20 பேர் கைது

வேட்டை நாய்கள், வேட்டையாடுவதற்கு பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகளை பறிமுதல் செய்ததோடு 20 பேரையும் கைது செய்தனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில்  வேட்டையாட வந்த 20 பேர் கைது
X

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் விராலிமலை பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் மான் மயில் முயல் போன்ற விலங்குகளை வேட்டையாட வந்த 20 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் நார்த்தாமலை பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதியில் முயல் மயில் மற்றும் மான் ஆகிய விலங்குகளை வேட்டையாட வந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நார்த்தாமலை உள்ளிட்ட பகுதிகள் காடுகள் நிறைந்த பகுதியாகும் இங்கு முயல் மயில் மான் உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் விராலிமலை பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காட்டுப்பகுதிகளில் மான், மயில்,முயல் உள்ளிட்டவைகளை வேட்டையாடுவதற்காக மினி லாரியில் குடுமியான்மலை அருகே சென்றுள்ளனர்.அப்போது அந்த வழியாக மாவட்ட வனத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்

சந்தேகப்படும் படியாக சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் அனைவரும் வேட்டையாட வந்தது தெரியவந்தது .மேலும் அவர்களிடமிருந்து நான்கு வேட்டை நாய்கள் மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தக்கூடிய கம்புகள் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை பறிமுதல் செய்து 20 பேரையும் கைது செய்து புதுக்கோட்டை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்..அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூல் செய்வதற்கு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  4. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  5. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  6. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  8. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  9. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  10. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு