Begin typing your search above and press return to search.
பெரம்பலூர்: 33 ஆண்டுகள் பழமையான மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் 33 ஆண்டுகள் பழமையான மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் 33 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது.
மிகவும் பழுதடைந்து காணப்பட்ட அந்த தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து இன்று அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உரிய பாதுகாப்போடு பொருள் மற்றும் உயிர் சேதமின்றி தொழில் நுட்ப வல்லுநர்களை கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தரைமட்டமாகும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாடாலூர் ஊராட்சி மன்ற தலைவர் நாகஜோதி இளையராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த தொட்டியை இடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.