Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் டீ கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
பெரம்பலூரில் டீ கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் டீ கடை நடத்தி வந்தவர் பெரம்பலூர் மாவட்டம் மறவநத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் .
இன்று காலை வெகு நேரமாக ஆகியும் கடை திறக்காததால் அருகில் உள்ளவர்கள் கடையை திறந்து உள்ளே பார்த்தபோது மின் விசிறியில் செல்வராஜ் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பெரம்பலூர் காவல் துறையினர் உயிரிழந்த செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். செல்வராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.