பெரம்பலூர்:திருட்டு போன 131 செல்போன்களை போலீசார் மீட்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு போன 131 செல்போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று உள்ளன. இதில் செல்போன் திருட்டு அதிக அளவில் பதிவாகி உள்ளது.
பேருந்து நிலையங்கள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் பொதுமக்களிடம் இருந்து செல்போன்கள் திருட்டு போனதாகவும், வழிபறி மூலமும் காணாமல் போனதாகவும் வரப்பெற்ற 150க்கும் மேற்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்பேரில் சைபர் க்ரைம் மூலமாக துப்பு துலக்கி சுமார் 131 செல்போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி தலைமையிலான போலீசார் செல்போன்களின் உரிமையாளரிடம் அதனை ஒப்படைத்தனர்.
துரிதமாக செயல்பட்டு செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசாரை பாராட்டியதோடு பொதுமக்கள் கவனமாக தங்களது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி தெரிவித்தார்